Share via:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தினசரி செய்தித்தாள் பத்திரிகை, செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்திய இறையாண்மையின் முக்கிய தூணாக விளங்கும் செய்தித்துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலக நடப்புகளையும், உள்ளூர் நடப்புகளையும் மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும் தினசரி செய்தித்தாள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், முதன்மை செய்தியாளர்கள் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கென்று இன்று (டிச.21) மாபெரும் சிறப்பு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இதனை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து நடத்தினர்.
பரிசோதனை முகாமிற்கு அனைத்து தினசரி செய்தித்தாள் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள், செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் பருவ இதழ்களில் பணிபுரியும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பு மருத்துவ பரிசோதனையில் கலந்து கொண்டனர். இதில் திரளான பத்திரிகைத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
***