Share via:
சென்னை மாநகராட்சியின் 59வது வார்டு தி.மு.க. மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதில் தி.மு.க. 153 வார்டுகளிலும், அ.தி.மு.க. 15 வார்டுகளிலும், காங்கிரஸ் 13 வார்டுகளிலும், சி.பி.எம். மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 4 வார்டுகளிலும் உறுப்பினர்களை பெற்றுள்ளன. ஏற்கனவே
122வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான ஷிபா வாசு, காங்கிரஸ் கவுன்சிலரான 165வது வார்டு கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் மற்றும் 146வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் ஆகிய 3 கவுன்சிலர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் தி.மு.க. கவுன்சிலர் உயிரிழந்துள்ளார். சென்னை மாநகராட்சியின் 59வது வார்ட தி.மு.க. மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த சரஸ்வதி திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறும்போது, ‘‘59வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் இறப்பு நமக்கும், கழகத்திற்கும் பேரிழப்பு. மேலும் எஸ்.எம்.நகர் உள்பட 59வது வார்டு பகுதி மக்களுக்கும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
சரஸ்வதியின் மறைவைத் தொடர்ந்து சென்னையில் தற்போது காலியாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.